2013年3月3日星期日

பல கிறுக்கல்களில் சில - 9 பதின்பருவம் - "பிரிவினைப்பருவம்".


   பதின்பருவம் -  "பிரிவினைப்பருவம்".
                     
                            பதின்பருவம்: இடைவெளிகள் ஏற்படுத்தும் பருவம் என்றே சொல்லவேண்டும்.    பிரிவினைப் பருவம்  என்றும் சொல்லலாம். பள்ளிப்பேருந்தில் இருந்து  இறங்கியவுடன் கட்டியணைத்து, முத்தமிட்டு வரவேற்கும் அம்மா, ஏனோ, நாம் வளர்ந்து, சைக்கிளில் வந்திறங்கும்போது அந்த வரவேற்ப்பை கொடுப்பதில்லை. இந்த இடைவெளி, இந்த பருவத்தில், அணைத்து உருவுகளிலும் விழுகிறது. தாய்-மகன், தாய்-மகள், தந்தை-மகன், தந்தை-மகள், அண்ணன்-தங்கை, அக்காள்-தம்பி. உண்மை. நாமும் தொடாமலேயே அன்பையும் பாசத்தையும் பரிமாறக் கற்றுகொண்டோம். ஆயினும் மிகச் சமீபத்தில், இதையெல்லாம் தவரவிட்டுடோமே என என்னும் அளவுக்கு ஒரு சம்பவம்.:  
                            என் அயல் (ஆங்கிலக் குடியுரிமைப் பெற்ற இந்தியன்) நாட்டு நண்பன் ஒருவன் தன் பெற்றோர்களை வழியனுப்ப விமானநிலையம் போனான். நானும் துணைக்குசென்றேன். அவன் பெற்றோர்களை ஆரத்தழுவி, முத்தமிட்டு வழியனுப்பி வைத்தான். நான் அவர்களையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஏனோ கண்கள் கலங்கியது. என்னைப்  பார்த்த  நண்பன் என்னிடம் பேசத் தொடங்கினான்.  
                           அவன்: Dude! You alright?
                            நான்:   Certainly. 
                           அவன்: Come on dude. You are not. You homesick?  
                            நான்:  I don't know. May be I am. Its just that I can't remember the last time I hugged or kissed my parents. I regret I missed all these moments.
                           அவன் : You don't have to. Coz its not your fault. Its the society. And you guys bother too much about the society.  
                     
                   அவன் சொல்வதிலும் உண்மை இருக்கத்தான் செய்தது. . "இதோ பாருடா! மீசை அரும்பியவனுக்கு பெற்றோர்களின் பாசத்தை!' என மற்றவர்கள் ஏளனம் செய்துவிடுவார்களோ என்ற எண்ணமும், கூச்ச  உணர்வும் நம்மை கொஞ்சம் தள்ளித்தான் வைத்துவிட்டன.
                           
                     ஒரு விடுமுறையில் என்னுடன் தொட்டுப்பிடித்து, கண்ணாமூச்சி, சமயங்களில் கிரிக்கெட்டும் விளையாடிய பக்கத்து வீட்டு அக்காக்களும்  எதிர் வீட்டு தங்கைகளும் அடுத்த விடுமுறையில் வீடினுள்ளயே இருந்தார்கள். (இருத்திவைக்கப்பட்டார்கள்). இவ்வளவு ஏன்?  என் கைக்கோர்த்து, தோலும், தோளும், உரசித் தோழமைப் பயின்ற தோழிகள் என ஒவ்வொருவரும் கொஞ்சம் கொஞ்சமாக விலகிச் சென்றனர். மூன்றாம் வகுப்பில் என்னுடன் ஒரே மோட்டார் சைக்கிளில், ஒரே இருக்கையில் (மூன்று நபர்களாக, வண்டி ஓட்டிய அண்ணனையும் சேர்த்து) பள்ளிக்கு வந்த என் தோழி, ஐந்தாம் வகுப்பிலிருந்து ஆட்டோவில் சென்றாள் (அனுப்பிவைக்கப்பட்டாள்).                                                

                               இப்படியே பிரிவுகள் வளர,  அந்த பிஞ்சு வயதிலேயே, எங்களுக்கு, ஆண்களும் பெண்களும் பழகுவது தவறென்ற தவறான விஷயத்தை மிகச்சரியாக எடுத்துரைத்தது யார்? பெற்றோர்களா? சினிமாவா? இல்லை ஐந்தாம் வகுப்பிலிருந்தே ஆண் மானாக்கரையும் பெண் மானாக்கரையும் தனித்தனியாக அமரச் செய்த பள்ளிக்கூடங்களா? பேருந்துகளிலும் ரயில்களிலும் "ஆண்கள்", "பெண்கள்" என இன்றளவும் எழுதும் அரசையா? யாரைச் சாடுவது?

                          கிராமத்துத் தோழிகளுடன் கண்ணாமூச்சி, பக்கத்து வீட்டுத் தோழிகளுடன் மணல் விளையாட்டு. தங்கைகளுடன் யானை விளையாட்டு, அக்காக்களின் உப்புமூட்டை, பள்ளித்தோழிகளிடம் இருந்து கிட்டும் இடைவெளி நேர குச்சி மிட்டாயும், எழந்தப்பழமும், நெல்லிக்காயும் எல்லாமும் ஒரேடியாக நின்று  போகும் இப்பருவம், எல்லாவற்றிற்கும் மேலாக முதல் தோழியாம் அன்னையின் மடி சாய்ந்து உறங்கும் பழக்கம் நின்று போகும் இப்பருவம், "பிரிவினைப்பருவம்".

没有评论:

发表评论